ஈரோடு மாவட்டம் பவானி அருகே இடி தாக்கியதில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
அம்மாப்பேட்டை ஒண்டிக்காரன் தோட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் தமது மனைவி மற்றும் மகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழையின்போது இடி தாக்கியதில் ராஜேந்திரனின் குடிசை வீடு தீபற்றி எரிந்தது.
சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் தீயில் எரிந்து சேதமடைந்தது.