பீகார் மாநிலம் ராஜ்கீரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
நாளந்தா பல்கலைக்கழகம் ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது.
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், உலகின் முதல் உறைவிட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் அருகே புதிய வளாகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
40 வகுப்பறைகள் , 1900 இருக்கைகள் , 300 இருக்கைகள் கொண்ட இரண்டு அரங்குகள் , மாணவர் விடுதி,சர்வதேச மையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், 17 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தூதர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.
முன்னதாக நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை பிரதமர் மோடி சுற்றிப்பார்த்தார்.