அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர்.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் 15 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பிஸ்வநாத் லக்கிம்பூர், ஹோஜாய், நல்பாரி, உள்ளிட்ட மாவட்டங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்திற்கு 26 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் கோபிலி நதிகளில் வெள்ளநீர் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது.
தலைநகர் கவுகாத்தி முழுமையாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் உணவுவின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், அசாமில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.