ஆன்லைனில் விளையாட்டு கருவி ஆர்டர் செய்த பெண்ணுக்கு விஷப்பாம்பு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரூ ஷார்ஜாபூரில் வசிக்கும் பெண் ஒருவர் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் என்ற விளையாட்டு கருவியை ஆண்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
இதனையடுத்து குறிப்பிட்ட நாளில் பார்சல் ஒன்று வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்தபோது, விளையாட்டு கருவிக்கு பதிலாக பாம்பு இருந்துள்ளது.
பார்சல் முழுமையாக பிரக்கப்படாததால் பாம்பு வெளியே வரமுடியாமல் தலையை மட்டும் நீட்டி கொண்டு இருந்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.