கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தீவிரவாதிகள் போல கடல் வழியாக ஊடுருவ முயற்சிக்கும் ரெட் ஃபோர்ஸ் எனப்படும் காவலர்களை, புளு ஃபோர்ஸ் எனப்படும் கடலோர பாதுகாப்பு படையினர் போலீசார் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து ராசாபேட்டை கடல் பகுதியில் சந்தேகிக்கும் விதமாக படகில் வந்த ரெட் ஃபோர்ஸ் எனப்படும் காவலர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 4 போலி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைபற்றப்பட்டன