மழைக் காலங்களில் அறுந்து விழும் கேபிள் ஓயர்களை சரி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சி முன்வரவேண்டும் என கல்லூரி மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர், தேர்வு எழுதுவதற்காக நுங்கம்பாக்கம் சாலை வழியாக சென்றுள்ளார்.
அப்போது, மழை மற்றும் காற்றினால் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கேபிள் ஒயர் அவரது கழுத்தில் சிக்கியது. இதில், அவருக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக கனரக வாகனங்கள் ஏதும் அந்த வழியே வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அந்த மாணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.