ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பிற்கு நீடிக்கும் தட்டுப்பாடு!
Aug 10, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பிற்கு நீடிக்கும் தட்டுப்பாடு!

Web Desk by Web Desk
Jun 20, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரேஷன் அட்டைதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதே நேரத்தில் போதிய அளவில் பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த விளக்கம் விளிம்புநிலை மக்களுக்கு பலன் தருமா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….!

நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் வாழ்வாதரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக தொடங்கப்பட்டது தான் நியாய விலைக் கடைகள். பொது விநியோக முறையின் கீழ் 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 2.06 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் நியாய விலைக் கடைகள் மூலம் பயன்பெறுகின்றனர். பயனாளிகளுக்கு மாதந்தோறும் அரிசி இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பும், பாமாயிலும் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன. இந்த இரு பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகளும் வெளியாகின.

மே மாதம் பொருளே சிலருக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டும் நிலையில் ஜூன் மாதமும் துவரம் பருப்பு, பாமாயிலை அரசு விநியோகம் செய்யாதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் சில ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு இருந்தால் பாமாயில் இல்லை, பாமாயில் இருந்தால் துவரம் பருப்பு இல்லை என்ற நிலை இருப்பதாக பயனாளிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் எவ்வித தட்டுப்பாடும் இன்றி சீராக விநியோகம் செய்யப்படுவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை தமிழக அரசு தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து கிடங்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளிம்புநிலை மக்களுக்காக தொடங்கப்பட்ட ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைக்கவும், குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிக்காமல் உணவு பொருட்களை உடனுக்குடன் வழங்கவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags: The shortage of palm oil and duram dal in ration shops!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மாணவர்கள் திலகமிட தடையா, திமுக அரசுக்கு காடேஸ்வரா சுப்பிரமணியம் கடும் கண்டனம்!

Next Post

கோடீஸ்வரர்கள் விரும்பும் ஐக்கிய அரபு அமீரகம்!

Related News

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

கடந்த 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!

சேலத்தில் அரசுப்பேருந்து மோதியதில் பெண் படுகாயம்!

எந்த வாக்காளரும் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட மாட்டார்கள் – உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அலங்காநல்லூர் அருகே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் – எல்.முருகன், அண்ணாமலை பங்கேற்பு!

வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டம்!

இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடல் – பாகிஸ்தானுக்கு இரு மாதங்களில் 1,240 கோடி இழப்பு!

பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட பாஜகவினர்!

பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகத்தை ஒரு நாளைக்கு 100 கி.மீட்டராக உயர்த்துவதே நோக்கம் – நிதின் கட்கரி

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ. 1.50 லட்சம் கோடியாக உயர்வு!

தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வரும்போது தான் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இருப்பது தெரிகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies