சாராய விற்பனைக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையும், தமிழக அரசும் செயலிழந்துள்ளதாக தெரிவித்தார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் முழு மதுவிலக்கை கொண்டுவரும் அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையால் தமிழகம் தள்ளாடுவதாகவும், மக்கள் சீரழிவதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.