இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அரசின் செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
மோடி 3-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மேத்யூ மில்லர், இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அதற்கான திட்டத்தை இருநாடுகளும்தான் வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.