ஆந்திர பிரதேச 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 164 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து முதலமைச்சராக தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.
துணை முதல்வராக பவன் கல்யான் பொறுப்பேற்றார்.இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி தலைமையில் ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், திரைப்பட நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண். பிதாபுரம் எம்எல்ஏ மற்றும் துணை முதல்வராக முதல்முறையாக சபைக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.