டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கலால் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மேலும் ஜாமீன் உத்தரவை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு அமலாக்க இயக்குநரகத்தின் வேண்டுகோளையும் விசாரணை நீதிபதி நிராகாரித்தார்.
இந்நிலையில் ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.