புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 11-ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 21 வயது இளைஞரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியும், நெய்வேலியைச் சேர்ந்த சிவாவும் காதலித்து வந்த நிலையில், அந்த சிறுமி கர்ப்பமானார்.
இதையறிந்த சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சிவா கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.