தஞ்சாவூர் பெரியகோவில் அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை பெருவுடையார் ஆலயத்தில் திருக்கல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது.
இதையொட்டி சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்க்கப்பட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஸ்ரீ பெருவுடையாருக்கு மாலை மாற்றி, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை நால்வர் சன்னதியிலிருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். இத்திருக்கல்யாண வைபோகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.