கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூட்டில் இரு குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி அஸ்வதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சந்தோஷ் வேலைக்குச் சென்ற நிலையில், அஸ்வதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த அருமனை போலீசார் அஸ்வதியின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஸ்வதி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.