தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் உண்டியலில் சுமார் 5 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி, அறங்காவலர் குழுத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது 4 கோடியே 98 லட்சத்து 7 ஆயிரத்து 405 ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ 400 கிராம் தங்கம், 54 கிலோ 500 கிராம் வெள்ளி உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.