புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆதிதிராவிடர் காலனியில் சீரான மின்சாரம், குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரையப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலணியில் பெய்த மழையால் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதனைக் கண்டித்து அறந்தாங்கி- ஆலங்குடி சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துணை ஊரக வளர்ச்சி அலுவலர் சின்னையன் மற்றும் ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.