கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
மலப்புரம் அடுத்த புல்பெட்டாவைச் சேர்ந்த அஷ்ரப், தனது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக ஆட்டோவில் மலப்புரம் சென்றுள்ளார்.
அப்போது, முட்டிப்பாடியில் நிலை தடுமாறிய ஆட்டோ, எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அஷ்ரப், அவரது மனைவி பாத்திமா, மகள் ஃபிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.