கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 204 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியதையடுத்து, கடலூர் மாவட்டம் முழுவதும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
அந்தவகையில் இதுவரை 204 லிட்டர் சாராயம், 500-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மாநில மதுபானபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், 119 வழக்குகள் பதிவு செய்துள்ளதுடன், 23 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், கள்ளச்சாராயம் மற்றும் மது கடத்தல், மது விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.