இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் எஸ்.வி.என். பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மருத்துவக் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க வேண்டுமென வாதிட்டனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே மருத்துவக் கலந்தாய்வுக்குத் தடை கோரியபோதும், உச்சநீதிமன்றம் அதை ஏற்க மறுத்தது. மேலும், நீட் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.