புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்ததாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததாக மகேஷ் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இ
ந்நிலையில் அவருடன் வந்த செல்வம் என்பவரும், கள்ளச்சாராயம் குடித்ததாக மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது.
ஜிப்மரில் கள்ளச்சாராயம் குடித்ததாக சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.