அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஜம்மு காவல்துறை துணை இயக்குநர் ஆனந்த் ஜெயின் ஆய்வு செய்தார்.
சந்தர்கோட் மற்றும் ரம்பன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அவர், மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோ மீட்டர் தொலைவில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ள பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 29 முதல் ஆகஸ்ட் 19, 2024 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.