கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஜெயங்கொண்டத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நீதிமன்ற வளாகம் முன்பு, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை அரசு நிவாரணமாக வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.