திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
குத்தகை காலத்தை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கோரி எஸ்ஆர்எம் ஹோட்டல் அளித்த விண்ணப்பத்தை தமிழக அரசு நிராகரித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, குத்தகை காலத்தை நீட்டிக்க உத்தரவிடக்கோரி ஹோட்டல் நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
மனுதாரரிடம் ஆலோசனை நடத்தாமல் குத்தகை கால நீட்டிப்பு கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரரை அழைத்து பேசி, உரிய உத்தரவு பிறப்பிக்க சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலாளருக்கு உத்தரவிட்டார்.