திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் குபேர பெளர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை வைத்து சமுத்திர அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் திரளான பெண்கள் கடற்கரை மணலில் அமர்ந்து, விளக்கேற்றி கடல் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.