கேரளாவில் பிரம்பால் தாக்கிய பாகனை மிதித்துக் கொல்லும் யானையின் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுவது வழக்கம். இதற்காக அடிமாலி பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன், யானையை பராமரித்துக் கொண்டிருந்தார்.
சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில் கட்டளையை பின்பற்றாத யானையை பாகன் தொடர்ந்து பிரம்பால் தாக்கினார்.
இதனால் ஆக்ரோஷமடைந்த யானை, பாலகிருஷ்ணன் மீது ஏறி சரமாரியாக மிதித்ததில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதறவைக்கும் காட்சியில் தற்போது வெளியாகியுள்ளது