ஈரோட்டில் அலங்கார உதிரிபாக விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
செங்கோடம்பாளையம் பகுதியில் சஞ்சை என்பவருக்கு சொந்தமான அலங்கார உதிரிபாக விற்பனை கடை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நள்ளிரவில் கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், கடையின் முன்பு நின்றிருந்த கார் உள்பட ஏராளமான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.