ஒடிசா முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தனது சொந்த கிராமத்திற்கு சென்ற மோகன் சரண் மாஜிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கெண்டுஜார் மாவட்டத்தின் ரைகேலா கிராமத்தில் அமைந்துள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தாயிடம் ஆசி பெற்றதோடு, அவரோடு அமர்ந்து உணவருந்தினார்.
முன்னதாக, உள்ளூர் பாஜக தலைவர்கள் மோகன் சரண் மாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.