ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி, தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழை, வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வைத்து வணங்கினார்.
ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும், அடுத்த மாதம் 12-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.
இந்தத் திருமண விழா 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அவர்களது திருமண அழைப்பிதழை முதன்முதலாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற கங்கை ஆரத்தியில் நிதா அம்பானி பங்கேற்றார்.