“புதுச்சேரியில் மின் கட்டணத்தை குறைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரை புதுச்சேரியில் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.