தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 2ஆம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி கன மலைப்பகுதியில் பெய்த மழையால், குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்தது.
அதனை தொடர்ந்து இந்த இரு அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளுக்கான நீர் வரத்து குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.