நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டபோது நமது உரிமைகள், விடுதலைக்காக போராடியவர்களை நினைவுகூருவோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நெருக்கடி நிலையின்போது அரசியலமைப்புச் சட்டம் சமரசப்படுத்தப்பட்டு, ஜனநாயகம் ரத்து செய்யப்பட்டதாகவும், சுதந்திரம் நசுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நமது உரிமைகள் மற்றும் விடுதலையைக் காக்க போராடியவர்களை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டுமென கேட்டுக்கொண்ட எல்.முருகன், ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்த சூளுரைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.