கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது!- குஷ்பு கேள்வி
Nov 1, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது!- குஷ்பு கேள்வி

Web Desk by Web Desk
Jun 26, 2024, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் சாராயம் குடிப்பதை கூட அறியாமல் கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது என தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயம் அருந்திய 61 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 21 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் சார்பில் விசாரணை நடத்த அதன் உறுப்பினர் குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

மேலும், திரட்டப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பெண்கள் சாராயம் குடிப்பதை கூட அறியாமல் கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது ? என கேள்வி எழுப்பினார். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: What was Kallakurichi police doing!- Khushpu asked
ShareTweetSendShare
Previous Post

மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானம் வைத்த விவகாரம்!

Next Post

200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சட்டமன்றம் நோக்கி பேரணி!

Related News

வியாட்நாமில் வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு – 13 பேர் பலி!

தஞ்சையில் நெல் பாதிப்பு திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு சான்று – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

டெல்லியின் பெயரை இந்திரபிரஸ்தா என மாற்றக் கோரி பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் அமித்ஷாவுக்கு கடிதம்!

கரூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து!

நாய் வடிவ ரோபோவை கொண்டு தீயை அணைக்கும் சீனா!

அம்மாப்பள்ளி அணையில் இருந்து உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புகழ் அனைத்தையும் நம்மிடமிருந்து எடுத்துக்கொள்கிறது – நடிகர் அஜித்குமார்

விவசாயிகளுக்குரிய பதிலளிக்காத அதிகாரிகளுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் – சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநருக்கு ‘டும் டும் டும்!

கோவாவில் 125 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பு!

ரூ.4170 கோடி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்!

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!

டெல்லி அரசின் நடவடிக்கை – குறைந்து வரும் காற்று மாசு!

நாமக்கல்லில் நவ.4-ல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்!

தெலங்கானா நியமன அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு!

இந்தியாவின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமான கேரளா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies