இரண்டாம் முறையாக சபாநாயகர் : ஓம் பிர்லா சாதனை!
Oct 2, 2025, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரண்டாம் முறையாக சபாநாயகர் : ஓம் பிர்லா சாதனை!

Web Desk by Web Desk
Jun 26, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

20 ஆண்டுகளில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற முதல் மக்களவை சபாநாயகர் என்ற பெருமை பெற்ற ஓம் பிர்லா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இதுவரை மக்களவை தலைவர் பதவியை அலங்கரித்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மட்டுமே மீண்டும் மக்களவை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலும், ஒருவர் மட்டுமே இரண்டு முறை மக்களவை சபாநாயகராக பதவி வகித்திருக்கிறார்.

18வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இதனால், பல்ராம் ஜாக்கருக்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக மக்களவை தலைவராகும் பெருமையைப் பெற்றிருக்கிறார் ஓம் பிர்லா .

பிரதமர் மோடியின் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக , இரண்டாவது முறையாக தொடர்ந்து மக்களைவைத் தலைவராகும் சிறப்பை பெற்றிருக்கிறார்.

மேலும், கடந்த 20 ஆண்டுகளில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மக்களைவைத் தலைவர் என்ற சாதனையையும் ஓம் பிர்லா படைத்திருக்கிறார்.

முன்னதாக, 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை 11வது மக்களவைத் தலைவராக இருந்த பி.ஏ. சங்மாதான் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி மக்களவை சபாநாயகராவார்.

அவரைத் தொடர்ந்து ,1999ம் ஆண்டில், மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எம்.சி.பாலயோகி 2002 ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

பாலயோகிக்குப் பின் மக்களவையின் சபாநாயகரான சிவசேனா உறுப்பினர் மனோகர் ஜோஷி, 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெறாததால், மீண்டும் சபா நாயகராகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

எனவே, 2004ஆம் ஆண்டில், சிபிஐஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சோம்நாத் சட்டர்ஜி மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன் ,கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோம்நாத் சட்டர்ஜி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

2009 ஆம் ஆண்டு, காங்கிரஸ் சார்பில் மீரா குமார்,15வது மக்களவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் மீரா குமார் தோல்வியடைந்தார்.

2014ம் ஆண்டு, இந்தூரில் இருந்து பாஜக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்ட சுமித்ரா மகாஜன் மக்களவை சபாநாயகரானார். எனினும், 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுமித்ரா மகாஜன் போட்டியிடவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா 17வது மக்களவையின் சபா நாயகரானார்.

இப்போது மீண்டும் அதே தொகுதியிலிருந்து வெற்றிபெற்று , நாடாளுமன்றத்துக்குள் சென்றிருக்கும் ஓம் பிர்லா, மீண்டும் இரண்டாவது முறையாக 18-வது மக்களவையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக சபாநாயகர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சபாநாயகராக தேர்வாகியுள்ளார் ஓம் பிர்லா.

1962ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி, இந்து குடும்பத்தில் ஸ்ரீகிருஷ்ண பிர்லா மற்றும் சகுந்தலா தேவிக்கு பிறந்த ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவிலுள்ள அரசு வணிகவியல் கல்லூரியில் இளங்கலை பட்டமும் , அஜ்மீரில் உள்ள மகரிஷி தயானந்த சரஸ்வதி கல்லூரியில் வணிகவியல் பாடத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்ட ஓம் பிர்லா, இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

1987ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் கோட்டா மாவட்டத் தலைவராக பணியாற்றிய ஓம் பிர்லா, அதே அமைப்பில் 1991ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை, மாநிலத் தலைவராக பதவி வகித்தார்.

தொண்ணூறுகளில் ராஜஸ்தானில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா வலிமையாக தடம் பதிக்க ஓம் பிர்லாவின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது. தன்னலமற்ற தனது பணிகளால், 1997 ஆம் ஆண்டு,பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசிய துணைத் தலைவரானார் ஓம் பிர்லா.

2003ம் ஆண்டு முதன் முதலாக , தெற்கு கோட்டா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு , தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 10,101 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தொடர்ந்து, அடுத்து அடுத்து, நடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓம் பிர்லாவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து கொண்டே இருந்தது.

13வது ராஜஸ்தான் சட்டப்பேரவையில், சபை விவாதத்தில், 500க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டதைத் தொடர்ந்து, 6 முறை ஓம் பிர்லாவுக்கு “சதன் கே சிதாரே” என்று சிறப்பு பட்டம் தரப்பட்டது.

IIT என்றால் கோட்டா என்றும் சொல்லும் அளவுக்கு, அந்நகருக்குப் பெருமை தேடி தந்த பெருமை ஓம் பிர்லாவையே சேரும்.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவின் பாஜக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்ட போது, அதை சீரமைக்க, அமித்ஷாவால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓம் பிர்லா, ராஜஸ்தானில் பாஜகவின் வளர்ச்சிக்குப் பெரும் துணைபுரிந்தார்.

இதனாலேயே, அவர் 2014ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, கோட்டா தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

ஒரு சபாநாயகராக இருந்தவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அதையும் சாதித்து காட்டி, மக்கள் செல்வாக்குள்ள சபா நாயகராக இருக்கிறார் என்பது தான் ஓம் பிர்லாவின் சாதனை.

Tags: Speaker Om Birla achievement for the 2nd time!
ShareTweetSendShare
Previous Post

சபாநாயகரின் அதிகார வலிமை!

Next Post

எதிர்க்கட்சித் தலைவரின் பணி, பொறுப்புகள் என்ன?

Related News

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies