கென்யாவில் நடப்பது என்ன? TIK TOK-ஆல் கலவரம் போர்க்களமான வீதிகள்!
Nov 17, 2025, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கென்யாவில் நடப்பது என்ன? TIK TOK-ஆல் கலவரம் போர்க்களமான வீதிகள்!

Web Desk by Web Desk
Jun 26, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கென்யாவில் அரசு விதித்த புதிய வரிகளுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்ததால் பல நகரங்கள் பற்றி எரிகின்றன. இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டம் நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அதே போல கென்யாவில் ஜூலை முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டம் நிதியாண்டாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பாக வரிகளை உயர்த்தும் வகையிலான நிதி மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் கென்ய அரசு தாக்கல் செய்தது. அத்தியவாசியப் பொருட்களான BREAD, சமையல் எண்ணெய் போன்றவற்றுக்கான வரியை உயர்த்தும் சரத்துகள் அந்த மசோதாவில் இருந்ததாக தெரிகிறது. அதற்கு எதிராக மக்கள் தொடங்கிய போராட்டம் கலவரமாக மாறியிருக்கிறது.

இதில் முக்கியமான செய்தி என்னவென்றால் மக்கள் தெருவில் இறங்கி போராட காரணம் டிக்டாக் வீடியோக்கள் என்பதே. சீனாவைச் சேர்ந்த டிக்டாக் நிறுவனத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம்.

2020-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை பெரும்பாலான இந்தியர்கள் டிக்டாக்கில் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏராளமானோர் விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் டிக்டாக்கை பயன்படுத்தினார்கள். சில நொடிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய பலருக்கு வெள்ளித்திரையில்கூட வாய்ப்பு கிடைத்தது.

மேலும் சிலர் நல்ல தகவல்களை பரப்ப டிக்டாக்கை பயன்படுத்திக் கொண்டனர். எப்போதுமே நல்லது இருக்கும் இடத்தில் கெட்டதும் இருக்குமல்லவா… அதற்கு டிக்டாக் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆபாசமான வீடியோக்களும், வதந்திகளும் டிக்டாக்கில் வலம்வந்ததை நாம் அறிவோம்.

குறிப்பாக கொரோனா காலத்தில் பல்வேறு தவறான தகவல்கள் டிக்டாக்கில் பரப்பப்பட்டன. அதற்கெல்லாம் மொத்தமாக ஒரு முடிவு கட்டவே டிக்டாக்குக்கு தடை விதித்தது மத்திய அரசு.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் டிக்டாக்கை அனுமதிக்கவில்லை என்றாலும் கென்யாவில் அது பயன்பாட்டில்தான் இருந்தது. அந்நாட்டு இளைஞர்கள் பலர் டிக்டாக்கை அதிகளவில் பயன்படுத்திவந்தனர்.

அவர்களில் ஒருவர் நிதி மசோதாவை விமர்சித்து பதிவிட்ட வீடியோ வைரலானதால் அதே CONCEPT-ஐ பிறரும் கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ‘OCCUPY PARLIAMENT’, ‘REJECT FINANCE BILL 2024’ போன்ற HASHTAG-களில் பதிவுகள் அதிகரித்தன. அவற்றில் டிக்டாக் பிரபலங்களின் பதிவுகளும் அடக்கம்.

எல்லாம் சேர்ந்து கென்ய அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் பரவச்செய்தது. பெரும் போராட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டங்கள் டிக்டாக்கிலும் எக்ஸ் தளத்திலும் நடைபெற்றன.

ஏராளமானோர் கருப்பு உடை அணிந்து கென்ய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். நிதி மசோதாவுக்கு எம்.பி.-கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பலர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதனால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு தீ வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாகவும், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் நாட்டில் எத்தகைய தாக்கத்தையும் விளைவுகளையும் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.

Tags: What is happening in Kenya? Streets are a war zone due to TIK TOK!
ShareTweetSendShare
Previous Post

நேட்டோ பொதுச்செயலராக நெதர்லாந்து பிரதமர் தேர்வு!

Next Post

சபாநாயகரின் அதிகார வலிமை!

Related News

அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு – நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்த பாகிஸ்தான் வழக்கறிஞர்கள்!

மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கொடுக்கத்தான் வேண்டும் – டாஸ்மாக் ஊழியர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

திருவள்ளூர் : பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கத்தில் கூடுதல் நீர்திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1,200 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்!

யுரேனியத்தை செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சா்

Load More

அண்மைச் செய்திகள்

கவனம் ஈர்க்கும் மஞ்சு வாரியரின் ஆரோ குறும்படம்!

மயிலாடுதுறை : மயூரநாதர் கோவிலில் முடவன் முழுக்கு தீர்த்தவாரி உற்சவம்!

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

கிராண்டு விட்டாரா காரை ரீகால் செய்திருக்கும் மாருதி!

திருவண்ணாமலை : டீசல் டேங்கர் லாரி மோதி மூதாட்டி பலி!

திருச்செங்கோடு : கோயில் வளாகத்தில் கேட்பாரற்று சிதறிக் கிடந்த எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவங்கள்!

நவ.21-ல் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பைசன் படம்!

கரூர் : கிராமப் புற பகுதிகளில் உலா வரும் முகமூடி கொள்ளையர்கள்!

செவ்வாய் கிரகத்தில் இயங்கும் வகையில் ஜிபிஎஸ் இல்லாத ட்ரோன் சோதனை!

புதிய டாடா சியரா மிட்-சைஸ் எஸ்யூவி அறிமுகமானது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies