1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்த தளபதி Field Marshal Sam Manekshaw-வின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது 16ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உதகையில் உள்ள கல்லறைக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.