மக்களவை விதிமுறைகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்திருந்தால், அவை விதிமுறைகளையும், சட்டத்திட்டங்களையும் அவர் எதிர்கொள்ள வேண்டுமென கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் போதிய அறிவுறுத்தல்களை பிறப்பிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்கெனவே கூறியதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.