மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவியல் சட்டப் பெயர்களை மாற்றுமாறு கோரிக்கை வந்தால் அதைப் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினோ அல்லது எம்.பி.க்களோ தன்னை சந்திக்க அனுமதி கோரவில்லை என்றும், ஒருவேளை குற்றவியல் சட்டம் தொடர்பாக அவர்களிடம் ஆலோசனை இருந்தால், தன்னை சந்தித்து தெரிவிக்கலாம் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவியல் சட்டப்படி தடுப்புக் காவலில் அடைக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக தவறான கருத்து வெளியானதாக கூறிய அவர், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்படி வெறும் 15 நாட்கள் மட்டும்தான் ரிமாண்ட் காலம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.