மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல்காந்தி, ஹிந்துத்துவத்தை வன்முறையுடன் தொடர்புபடுத்தி பேசுவது துரதிருஷ்டவசமானது என ஆர்எஸ்எஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்துக்களை, வன்முறையுடன் தொடர்புபடுத்தி பேசினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செய்தித்தொடர்பாளர் சுனில் அம்பேகர்,
நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், ஹிந்துத்துவத்தை வன்முறையுடன் இணைத்துப் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது என தெரிவித்தார். விவேகானந்தர், மகாத்மா காந்தி என அனைவர் கூறிய ஹிந்துத்துவம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை போதிப்பதாக கூறினார். ஹிந்துத்துவம் குறித்து ராகுல் காந்தி பேசியது தவறு என்றும் சுனில் அம்பேகர் குறிப்பிட்டார்.