ஹரியானாவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம், கர்னால் மாவட்டம் தாரோரி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அம்பாலாவில் இருந்து டெல்லிக்கு கண்டெய்னர்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் தாரோரி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இது குறித்த தகவலறிந்து சென்ற ரயில்வே பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில் தடம்புரண்டதால் கர்னால் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.