கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே போலீசாரை தாக்கிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அன்னூர் காவல்நிலையத்தில் அழகுராஜா மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் பொங்கலூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையோரத்தில் மதுகுடித்து கொண்டிருந்த இளைஞர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்து காவலர்களை தாக்கிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.