கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழ மணக்குடியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் கொள்ளையடிக்க முயன்றவர்களை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பல்வேறு இடங்களில் அவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 30 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.