நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற புதிய தமிழகம் கட்சி அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் அனைவரும் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாஞ்சோலை பகுதிக்கு சென்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற கூடாது என்றும், தேவைப்பட்டால் சட்டரீதியாக போராடுவோம் என கூறியுள்ளார்.