ராணுவ வீரர்களின் நலனுக்காக குரல் எழுப்புவது போல், ராகுல்காந்தி அவர்களை அவமதித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
அனைவரிடமும் சகோதரத்துவத்தைப் பேணுவதாகக் கூறிவிட்டு, இந்துக்களை தாக்கியது யார் எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, இந்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி சிறுமைப்படுத்திவிட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.