நீட் தேர்வு பிரச்சினையில் மாணவர்களின் நலன் கருதி உரிய முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், வினாத்தாளைக் கசிய விட்டதாக கைதான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தருவோம் என்றும் உறுதியளித்தார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கூறினார்.