டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் இந்திய ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ராணுவ துணைத் தளபதியாக ஜெனரல் ராஜா சுப்ரமணி நேற்று பதவியேற்று கொண்டார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.