மூன்று மாநிலங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இன்று உத்தரகாண்ட், அசாம், மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல், டெல்லி, கிழக்கு ராஜஸ்தான், சட்டிஸ்கர், ஜம்முகாஷ்மீர், லடாக், ஜார்கண்ட், கோவா, மகாராஷ்டிரா, கேரளா, கடலோர கர்நாடகாவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.