தன்னை சிபிஐ கைது செய்ததற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில், சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை சிபிஐயும் விசாரித்து வருவதால், அதிகாரபூர்வமாக கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருந்தது. ஆனால், தன்னை சிபிஐ சட்டவிரோதமாக கைது செய்ததாக கூறி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஏழு நாட்களுக்குள் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.