தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சிகள் பேசுவதாக மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, மக்களவையின் மைய பகுதியில் திரண்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய தேர்தல் மூலம் மக்கள் தங்களை மீண்டும் தேர்ந்தெடுத்ததாகவும், உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தொடர்ச்சியாக பரப்பிய போதிலும், எதிர்க்கட்சியினர் தோல்வியைத் தழுவியதாகவும் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர்களை விட முதல்முறை எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான கொள்கையால் மக்கள் தங்களை மீண்டும் தேர்வு செய்ததாகவும், மத்திய அரசின் ஒவ்வொரு கொள்கையும் தேசத்தை முதன்மைப்படுத்தியே வகுக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.