குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறுபிள்ளை போல பாசாங்கு செய்ததாக பிரதமர் மோடி விமர்சித்தார்.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தி அழுது புலம்பி அனுதாபம் தேட முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.
கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு வழக்கில் ராகுல் காந்தி ஜாமினில் வெளியே வந்ததாக கூறிய பிரதமர், பிற்படுத்தப்பட்ட மக்களை திருடர்கள் என்று கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி, குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.
கூட்டணி கட்சிகளை சார்ந்து அரசியல் செய்துவரும் காங்கிரசை ஒட்டுண்ணி என்றும், கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் சிதைத்துவிடும் என்றும் கடுமையாக விமர்சித்தார்.