வடமாநிலங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிநீர் விநியோகமும் தடைபட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் நகரில் மாவட்ட நீதிமன்றத்தை வெள்ளம் சூழ்ந்ததால், நீதிமன்றப் பணியாளர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகில் சென்று மீட்டனர். கனமழை காரணமாக திப்ருகரில் அரசு அலுவலகத்துக்கும், பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மும்பை மரைன் டிரைவில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாமென மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது.